கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டாமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும்.

உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் 2 நாட்கள் செல்ல வேண்டாம்.

கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

More News >>