நெஞ்சை பிழிய வைக்கும் புஷ்பவனம் குப்புசாமியின் கஜா புயல் பாடல்

மக்கள் இசைப்பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடிய கஜா புயலின் கோரத்தாண்டவம் குறித்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை மட்டுமின்றி உள்மாவட்டங்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது கஜா புயல். டெல்டா மாவட்டங்கள்தான் கஜா புயலில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரே இரவில் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் காவிரி டெல்டா விவசாயிகள் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து எப்படி மீள்வோம் என கண்ணீரில் மிதக்கிறது காவிரி டெல்டா.

இத்துயரம் குறித்து நெஞ்சை பிழிய வைக்கும் பாடல் ஒன்றை மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வெளியிட்டுள்ளார். அவரது இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

More News >>