சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு-3 பேர் பலி

அமெரிக்காவின் சிகோகா நகரில் மருத்துவமனை ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகினர். மருத்துவமனைக்குள் நுழைந்த அந்த நபர் முதலில் பார்க்கிங் பகுதியில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின் ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மர்ம நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இத்துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை உயர் அதிகாரி உட்பட சிலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>