அனுஷ்காவுக்கும் வச்சாச்சு அழகான மெழுகு சிலை!

சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் பல நாடுகளில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. லண்டன், டில்லி, சிங்கப்பூர் இடங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகு சிலையை சமீப காலமாக மேடம் டுசாட்ஸ் வைத்து வருகிறது. சமீபத்தில், சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்ட நிலையில், தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகி அனுஷ்கா ஷர்மாவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

கையில் மொபைல் வைத்து செல்ஃபி எடுப்பது போன்ற ஆளுயுர சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நேற்று திறக்கப்பட்ட நிலையில், விழாவில் கலந்து கொண்ட அனுஷ்கா ஷர்மா, சிலை அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். எது சிலை எது அசல் என்று தெரியாத வண்ணம் அந்த சிலை அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதற்கு முன்னர், அமிதாப் பச்சன், ஷாரூக்கானுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் கணவரும் இந்திய அணியின் கேப்டனுமான விராத் கோலிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

More News >>