லோக்சபா தேர்தலில் போட்டியில்லை: சுஷ்மா ஸ்வராஜ் திடீர் அறிவிப்பு

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் தாம் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு அவர் வருகை தந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், வரும் லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடும் மனநிலையில் இல்லை என தெரிவித்தார்.

மேலும் அதே நேரத்தில் கட்சித் தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். சுஷ்மா ஸ்வராஜின் இந்த பேட்டி டெல்லி அராசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

More News >>