அதெப்படி பொன்னாரிடம் மல்லுக்கட்டலாம்? கேரளா போலீசை கண்டித்து நாளை குமரி பந்த்

சபரிமலை யாத்திரை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா போலீஸ் அவமதித்ததாக கூறி கன்னியாகுமரியில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதனால் சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொண்டர்களுடன் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலை யாத்திரை சென்றார்.

ஆனால் நிலக்கல்லில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருடன் பொன். ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அரசுப் பேருந்தில் ஏறி பம்பைக்கு சென்று அங்கிருந்து மலையேறி ஐயப்பனை கண்ணீர்மல்க உருக்கமான வழிபட்டார். இந்த நிலையில் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா போலீசார் அவமதித்ததாக கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

More News >>