வந்துவிட்டது... அடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தற்போது மின் ஊழியர்கள் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

சிஐடியு தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை மின்வாரியத்திற்கு வழங்கியுள்ளது.

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 23-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

23-ம் தேதி காலை 6 மணியிலிருந்து 24-ம் தேதி காலை 6 மணி வரை, 24 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>