கைவிட்ட காதலனை கொன்று கொத்துகறியாக்கி பாக். தொழிலாளர்களுக்கு விருந்து வைத்த பெண்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தம்மை கைவிட்ட காதலனை கொன்று கொத்துக்கறியாக்கி பாகிஸ்தான் கட்டுமான தொழிலாளர்களுக்கு விருந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமீரகத்தின் அல் ஐன் பகுதியில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்த 30 வயது மொராக்கோ பெண்ணுக்கும் அவரது நாட்டை சேர்ந்த இளைஞருக்கும் 7 ஆண்டுகாலம் காதல் இருந்து வந்தது.

திடீரென மொராக்கோ இளைஞர், தாம் நாடு திரும்பி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறேன் என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த காதலி அந்த இளைஞரை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்திருக்கிறார்.

பின் காதலனின் உடலை துண்டு துண்டாக்கி கொத்துக்கறியாக்கி பிரியாணி போன்ற மச்பூஸ் உணவை தயாரித்திருக்கிறார். இதை பக்கத்தில் கட்டுமான வேலை செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.

மொராக்கோ இளைஞரின் உறவினர்கள் அவரை காணவில்லை என புகார் கூறியிருந்தனர். மேலும் காதலியாக இருந்தவர் மீதும் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இத்தனை பயங்கர தகவல்களும் அம்பலமாகி உள்ளன. இப்போது அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

More News >>