கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ30 லட்சம் நிவாரணம் கோரி வழக்கு- அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

மதுரை: கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ30 லட்சம் நிவாரணம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கஜா புயல் 50க்கும் மேற்பட்டோரை காவு கொண்டிருக்கிறது. கஜா புயல் உயிரை குடித்த குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறது.

இதை ரூ30 லட்சமாக உயர்த்தி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

More News >>