7 தமிழர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - மதிமுகவுக்கு திமுக ஆதரவு

ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் மதிமுக போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோவுக்கு ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன் உள்ளி்ட்ட 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது திமுக வின் உறுதியான நிலைப்பாடு. ஆகவே 27 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் இந்த 7 பேரையும் விடுதலை செய்யாமல் மனித நேயமின்றி காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து மதிமுகவும், திகவும் இணைந்து அறிவித்துள்ள "ஆளுநர் முற்றுகை போரட்டத்திற்கு பாராட்டை தெரிவித்து, அப்போராட்டத்தை வரவேற்கிறேன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக ஆளுநர் செயல்பட்டு 27 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிசம்பர் 3-ந் தேதி நடைபெறும் முற்றுகைப் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவை அளிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

More News >>