போதும் புயலே..!

போதும் புயலே..!.......................................

கஜா, தானே, ஒக்கி..பெயர்கள் பல சூட்டசுழன்றடித்தாய்நிஜம்தான் பொய்யில்லை..படகுகள், பயிர்கள்மூழ்கடிக்கப் பெய்தாயே பெருமழைமீள வழியில்லை.!

நிலந்தனில் வந்தாடினாய் பசுமைவளந்தனைப் பந்தாடினாய்...குழந்தைபசித்தழுகிறதே...அதன்குடல் நனைக்கப்பால் இல்லை..வளர்ந்த பிள்ளைக்கும்உடல் மறைக்கதுணி இல்லை!

புயலென வந்துமின் கம்பம் சாய்த்தாய்வெளிச்சம் இழந்தோம்..வயல் எல்லாம்வாழை, நெல் சாய்த்தாய்விளைச்சல் இழந்தோம்!

மகள்களின் கல்யாணத்துக்காய்வைத்த விவசாயம்கானல் நீரானதே..புயலே நீபெருமழை பொழிந்தாய்இப்போஉணவும்கூட கனவு ஆனதே!

பாடுகள் மாறாத மீனவர், விவசாயி வாழ்வில்கேடுகளாய் நின்றாய்..ஆடுகள், மாடுகள் ஆகியவற்றோடுஐம்பதுக்கும் மேலாய்மனித உயிர்களையும்ஆசை தீரக் கொன்றாய்!

பள்ளிக் கூடங்களையும்மரக்கிளை நிறைந்த சுள்ளிக்காடாக்கிநடைபோட்டாய்..வயிற்றுப் பசியுடன்பள்ளி வரும் பிள்ளைகளின்அறிவுப் பசிக்கும்தடை போட்டாய்!

பச்சைமடி பூத்தபூமித்தாயின் பிள்ளைகள்பிச்சைக் கோலத்தில்..உயிரைத் தவிரமிச்சமில்லை எதுவும்அழுகை ஓலம்கேட்குதேபல நூறு கிலோமீட்டர்தூரத்தில்..!

பறவைகள் எல்லாம்கூடு இழந்தனமரங்கள் சாய்த்தாயே..மனிதஉறவுகள் எல்லாம்வீடு இழந்திடநீ எமக்கு புயலாய் வாய்த்தாயே..!

மணிக்கு நூறுகிலோ மீட்டர் வேகம்பெருங் காற்றாய்பாய்வது உனக்குஒரு கலையா..தனக்கென உள்ளஏழையர் குடிசையையும்சூறையாடிப்போகஉன் கல் நெஞ்சுஉருகவில்லையா?

காய்ந்தால் வறட்சிபெய்தால் மழைசுழன்றடித்தால் புயல்..இயற்கையே உனக்குஎத்தனை முகம்தான்..உன் ஆட்டத்தால்இழந்தததைச் சீரமைக்கவேண்டுமே ஒரு யுகம்தான்!

பார் புயலே..லட்சமாய் தென்னைகள்வாழைகள், பயிர்கள் சாய்ந்தனவே..மிச்சமென்று ஒன்றுமில்லைஅத்தனையையும் உன்கோர நாக்கு மேய்ந்தனவே..!

மகள்களின்கல்யாணத்துக்காய்பயிர்கள் நிலங்களில் உருவானது..புயலே நீ அழித்துப் போட்டாய்உருவான கனாசருகானது...!

பன்னிரெண்டு மாவட்டங்கள் உன்னால்கண்ணிரண்டில் கண்ணீர் வடிக்குது பார்..நாகை, தஞ்சைமாவட்டங்களிலோஇதயங்களில் ரத்தமேவடியுது காரணம்நீயின்றி வேறு யார்?

மந்திரி வந்தார்மத்தியக் குழு வந்தார்வரவில்லை மறு வாழ்வது..சுற்றியும் இருட்டேமிரட்டி வருகுதுஎப்படி மீள்வது?

போதும் போதும்..இனியாவது சாரளாய் வா..மழையாய் வா..பெருங்காற்றாய் வர வேண்டாம்..!புண்ணாய் கிடக்கிற ஏழை வாழ்வில்புயல் கொண்டுகீற வேண்டாம்.!

- அல்லிநகரம் தாமோதரன்

More News >>