லோக்சபா தேர்தலில் கோவையில் நானும் வேட்பாளர்.... வடதமிழக திமுக பிரமுகரை மிரட்டும் அந்தப்புரம்- Exclusive

லோக்சபா தேர்தலில் கோவையில் தாமும் போட்டியிடுவேன் என சினிமா பாணியில் அடம் பிடித்து வருகிறதாம் வடதமிழகத்து திமுக பிரமுகரின் கொங்கு மண்டலத்துக்கு அந்தப்புரம். இதுதான் திமுக சீனியர்களிடையே ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது.

திமுகவின் குறுநில மன்னர்களில் ஒருவர் அவர். ஆனால் மற்ற குறுநில மன்னர்களை விட கிச்சன் கேபினெட்டில் கோலோச்சுகிறவர்.

இதனால் திமுகவே இவரது கட்டுப்பாட்டில்தான் என்கிற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவரை ரெய்டுகள் மூலம் டெல்லி வளைக்கப் பார்த்தது.

இந்த பிரமுகரும் சில காலம் ‘ஆக்டிவ்’ காட்டாமல் அமைதியாக ஒதுங்கி இருந்துவிட்டு செலுத்த வேண்டியதை செலுத்தி சைலண்ட்டாக்கிவிட்டார். அண்மைக்காலமாக திமுகவின் கூட்டணி குழப்பங்களுக்கு பிதாமகனாக இருப்பவரும் இந்த வடதமிழகத்து பிரமுகர்தான்.

வடதமிழகத்தைச் சேர்ந்த இந்த பிரமுகருக்கு கோவையில் ஒரு அந்தப்புரம் இருக்கிறதாம். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அந்தப்புரத்தின் ‘அத்தான்’தான் நிர்வகித்து வருகிறாராம்.

அண்மையில் ரூ10 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் வடதமிழகத்து பிரபலம். அதுமட்டுமல்லாது லண்டனிலும் அந்தபுரத்துக்கு சொத்துகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இப்படி வளர்த்துவிட்ட அந்தப்புரம் இப்போது ‘சினிமா’ பாணியில் தாமும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்... என்னை எம்.பி.யாக்க வேண்டியது உங்க பொறுப்பு என கறாராக சொல்லியிருக்கிறதாம். இதை கேட்டு ஆடிப் போயிருக்கிறாராம் அந்த வடதமிழகத்து திமுக பிரமுகர்.

-எழில் பிரதீபன்

More News >>