மேகதாது அணை- திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. ஆனால் கர்நாடகாவின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

More News >>