அண்ணா அறிவாலயத்தில் டிச.16-ல் கருணாநிதி சிலை திறப்பு- சோனியா பங்கேற்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ந் தேதி நடைபெறும் மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அறிவாலயத்தில் ஏற்கனவே இருந்த அண்ணா சிலை அகற்றப்பட்டு இருவரது சிலைகளும் ஒரே மேடையில் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்த சிலைகள் டிசம்பர் 16-ந் தேதி திறக்கப்பட உள்ளன. இத்திறப்பு விழாவில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இதேபோல் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சோனியா காந்திக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்டு தாம் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஒப்புக் கொள்வதாக ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

More News >>