பிரபல இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராபர்ட் இன்று காலமானார்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களுள் ஒருவரான ராபர்ட் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் 1980களில் வெளியாகி வெற்றிப்பெற்ற பல படங்களை இயக்கியவர்கள் ராபர்ட் (68) மற்றும் ராஜசேகர். குறிப்பாக, பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தலை ராகம் படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இதன்பிறகு, இருவரும் தனியாக பிரிந்து படம் எடுக்கத் தொடங்கினர். ஆனால், அவ்வளவாக படம் ஓடவில்லை.

இதன்பிறகு, ராஜசேகர் சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டார். கொளத்தூரில் வசித்து வந்த ராபர்ட்டுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராபர்ட் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

More News >>