ஸ்டெர்லைட் ஆலை- தருண் அகர்வால் குழு அறிக்கையை பார்த்து சிரிப்பதா, அழுவதா? கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தருண் அகர்வால் குழுவின் அறிக்கையைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்துக்கு கமல்ஹாசன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கஜா புயல் நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை, மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது.

நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாததால் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மீது கோபமாக உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை பற்றிய ஆய்வுக்குழுவின் அறிக்கையை பார்த்து சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. எதன் அடிப்படையில் ஆய்வுக்குழு அறிக்கை அளித்தது என்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

More News >>