புத்தாண்டில் தமிழுக்கு வருவேன் - ராஷ்மிகா

"கீதா கோவிந்தம்" பட நாயகி ராஷ்மிகா வரும் புத்தாண்டில் தமிழுக்கு வருவேன் என கூறியிருக்கிறார்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா விரைவில் தமிழுக்கு வர இருக்கிறார். இதற்கிடையே, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரவியுள்ளது. இதுபற்றி ராஷ்மிகா கூறும்போது, "சமூக வலைதளங்களில் இதுபற்றி ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை" என்றார்.

மேலும் தனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, கண்டிப்பாக கோலிவுட்டிக்கு வருவேன். அது வரும் புத்தாண்டில் கூட நடக்கலாம் எனத் தெரிவித்தார்.

தற்போது தெலுங்கில் டியர் காம்ரேட் மற்றும் கன்னடத்தில் போகரு, யஜமானா ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

More News >>