குஜராத்தில் போலீஸ் தேர்வு வினாத்தாள் வெளியீடு - பாஜக நிர்வாகிகள் கைது

குஜராத்தில் காவலர் தேர்வு நடைபெற இருந்த நிலையில் கேள்வித்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகாரில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் காவலர் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2,440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தத் தேர்வை எழுத 8.75 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து பிற்பகல் தேர்வு நடைபெற இருந்த நிலையில், ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தேர்வு நடைபெறவிருந்த காலையில் சமூக வலைதளங்களில் காவலர் தேர்வு கேள்வித்தாள் வெளியானதைக் கண்டு தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வினாத்தாளை திருடி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வேறு வழியின்றி தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால் தேர்வுக்காக காத்திருந்து தயார் செய்த லட்சக்கணகான இளைஞர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதுகுறித்த விசாரணையில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

More News >>