மீண்டும் ஸ்ரீகாந்துடன் இணையும் ராய்லட்சுமி!

சவுகார்பேட்டை படத்தை தொடர்ந்து, ஒரு புதிய படத்தில் ராய்லட்சுமியும் ஸ்ரீகாந்தும் மீண்டும் ஜோடி சேர்கின்றனர்.

அறிமுக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் மிருகா என்ற படத்தில் ஸ்ரீகாந்த்தும் ராய்லட்சுமியும் தற்போது இணைந்து நடித்து வருகின்றனர்.

நடிகர் ஸ்ரீகாந்த், ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில் போன்று பல நல்ல கதைகளில் நடித்தவர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக கிடைப்பதில்லை.

கடைசியாக விஜய், ஜீவாவுடன் சேர்ந்து அவர் நடித்த நண்பன் படம் அவரை கொஞ்சம் தூக்கிவிட்டது. ஆனால், அதற்கு பின்னர் அவர் நடித்த படங்கள் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

காஞ்சனா படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற ராய் லட்சுமி, தற்போது தமிழில், நியா 2, யார், சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்தும் ராய்லட்சுமியும் முன்னதாக சவுக்கார்ப்பேட்டை என்னும் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இப்போது இருவரும் மிருகா என்னும் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். பன்னீர் செல்வம் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுத அறிமுக இயக்குனர் பார்த்திபன் இயக்குகிறார். சஸ்பன்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகிவரும் மிருகா படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடப்பெற்று வருகிறது.  

 

More News >>