மாரி 2 சொன்ன தேதியில் வெளியாகுமா?

தனுஷின் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க மூன்று சங்கங்கள் ஆலோசனை.

இந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த ஒன்றரை மாதம் எந்த படமும் ரிலீசாகவில்லை. பின் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து படத்தை வெளியிட வெளியீட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் ஆலோசனைபடி படங்கள் வெளியிடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் எல்லா படங்களும் சரியாக அவர்கள் சொன்னப்படி ரிலீசானது. ஆனால் காலா படம் மட்டும் நாங்கள் சொன்ன தேதியில் தான் ரிலீஸ் செய்வோம் என தனுஷ் தரப்பில் கூறப்பட்டது. அன்றிலிருந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தனுஷுக்கும் மோதல் ஏற்பட்டது.

மேலும் டிசம்பர் 21 தேதி மாரி 2 படத்தை ரிலீஸ் செய்வதாக தனுஷ் அறிவித்துள்ளார். ஆனால் வெளியீட்டு குழுவின்படி அடங்கமறு, பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் மாரி 2 படம் ரிலீசானால் மற்ற படங்கள் பாதிக்கப்படும். எனவே தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்த்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கமும் நாளை கலந்தாய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

விஷால் நடிகர் சங்கத் தலைவராகி நடக்கவுள்ள முதல் கலந்தாய்வு இதுவாகும். மேலும் மாரி 2 ரிலீசாகுமா என்பது இந்த கூட்டம் முடிந்த பின்பு தான் தெரியவரும்.

More News >>