மேகதாது அணை விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் கடிதம்

மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் அனுப்பியுள்ளார்.மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்களுடன் அம்மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் இன்று ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கர்நாடக மக்களுக்கு மேகதாது அணை எந்த அளவுக்கு தேவை என்பதை தமிழகத்திற்கு விளக்க விரும்புகிறோம். மேகதாது விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது.

காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கர்நாடக அரசும், மக்களும் விரும்புகிறோம். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரை தடுக்கலாம். மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 

More News >>