மகாராஷ்டிராவில் மேடையில் அப்படியே மயங்கி சரிந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைசர் நிதின் கட்காரி அப்படியே சுயநினைவே இல்லாமல் மயங்கி சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

மகாரஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அம்மாநில ஆளுநர் வித்யாசகர் ராவ் கலந்து கொண்டார்.

மேடையில் திடீரென நிதின் கட்காரி சுயநினைவு இழந்து அப்படியே மயங்கி சரிந்தார். அவரை வித்யாசாகர் ராவ் தாங்கிப் பிடித்தார்.

 

இதையடுத்து நிதின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

 

More News >>