சாலையில் கிடந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்- ராஜஸ்தானில் ஷாக்

ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரம் சாலையோரம் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரம் சாலையோரம் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 72.62 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் நேற்று இரவு, ஷாகாபாத் பகுதியில் சாலையோரத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்பகுதி மக்கள் தகவலின் படி அங்கு சென்ற தேர்தல் அதிகாரிகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பத்திரமாக எடுத்துச் சென்றனர்.இதுகுறித்த விசாரணையில் சாலையோரம் கிடந்தது கிஷன்கஞ்ச் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை கொண்ட இயந்திரம் என்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டதால் தேர்தல் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறி்த்து போலீஸார் மேற்கட்ட விசாரணை செய்து வருகிறது.

More News >>