இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு:பா.ரஞ்சித் தயாரிக்கும் படம்!

பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் பா.இரஞ்சித். இவர் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் " பரியேறும் பெருமாள்" சாதி பாகுபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பல திரையுலக நட்சத்திரங்களிடையே பாராட்டை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. வருகிற 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவிருக்கும் சென்னை சர்வதேச விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது.

அடுத்ததாக பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

'அட்டக்கத்தி' தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அதியன்-ஆதிரை இயக்குகிறார்.

More News >>