மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கன்னத்தில் பளார்விட்ட மர்ம நபர் கைது

மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கன்னத்தில் பளார் என அறைந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் அம்பெர்நாத் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும் குடியரசு கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அத்வாலே கன்னத்தில் அறைந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்வாலே ஆதரவாளர்கள் அந்த மர்ம நபரை பிடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் அந்நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

#WATCH Maha: People thrash Pravin Gosavi, a worker of the youth wing of Republican Party of India, who slapped Union Minister & party leader Ramdas Athawale at an event in Thane y'day. Gosavi has been admitted to a hospital. FIR registered against him, investigation on. (08.12) pic.twitter.com/zvYmNaV8Wi

— ANI (@ANI) December 9, 2018

 

மத்திய அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அமைச்சருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

More News >>