மாரியையே மாற்றிய ஆனந்தி மாரியின் ஆனந்தி பாடல் ரிலீஸ்!

மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ள வானம் பொழியாமா பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மாரி 2 படத்தின் வானம் பொழியாமா பூமி விளையுமா என்ற பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்த பாடலை இளையராஜா பாடியுள்ளார். இளையாராஜாவுடன் இணைந்து பாடகி மானசி இந்த பாடலை பாடியுள்ளார்.

பாடலின் லிரிக் வீடியோவில், கெத்தா, ஜாலியான ரவுடியாக ரவுண்டு கண்ணாடி, நீண்ட கிர்தாவுடன் கழுத்தில் சங்கிலி மையமாக காட்சியளித்த மாரி தனுஷை, இந்த பாடலில் குடும்பஸ்தன் தனுஷாக ஆனந்தி மாற்றியுள்ளார் என்பது வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. அதேபோல அராத்து ஆட்டோ ஆனந்தியும் அழகான அமைதியான ஆனந்தியாக இப்பாடலில் தோன்றுகிறார்.

இரண்டாம் பாதியில், இந்த பாடல் இடம்பெற வாய்ப்புள்ளதாக இதன் வரிகள் மற்றும் காட்சிகள் மூலம் கணிக்க முடிகிறது.

More News >>