114 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றிய மு.க.ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாட்டிலேயே மிகவும் உயரமான கட்சி கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாட்டிலேயே மிகவும் உயரமான கட்சி கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் 114 அடி உயர புதிய கொடி கம்பம் நிறுவப்பட்டுள்ளது. கொடி ஏற்றத்திற்கான நிகழ்ச்சி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் படை சூழ, அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் இரு வண்ணக் கொடியை ஏற்றி வணங்கினார்.

நாட்டிலேயே மிக உயரமான கட்சி கொடிக்கபமான இது புனேவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. சுமார், 2430 கிலோ எடை கொண்ட கொடிக்கம்பத்தில் ஹை பீம் லைட், டைமர் தானியங்கி, இடிதாங்கி போன்ற முக்கிய தொழில்நுட்பங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

More News >>