ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா செய்தது ஏன் என தெரியாது: ரஜினிகாந்த்

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது ஏன் என்ற உண்மையை தெரியாமல் தம்மால் பேச முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது:

மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்ற உண்மையை தெரியாமல் என்னால் பேச முடியாது.

அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து பலமுறை பேசிவிட்டேன். பேட்ட திரைப்படம் வெளிவந்ததும் அடுத்த படம் பற்றி பார்க்கலாம்

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

More News >>