முலாம் பூசப்பட்ட போலிகள்.... களைகள்...விலகினால் வருந்தமாட்டோம்.. செந்தில் பாலாஜி மீது தினகரன் அட்டாக்

திமுகவில் செந்தில் பாலாஜி இணைவதை விமர்சித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் தினகரன்.

தினகரன் வெளியிட்ட அறிக்கை விவரம்:

சிலர் சுயநலத்துக்காக தலைமையை விட்டு விலகுவதும் மன்னிப்புக் கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. துரோகிகளும், விரோதிகளும் அமமுகவின் வளர்ச்சியைத் தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப் போகிறார்கள்?

அமமுகவில் இருந்து சில நபர்களோ, குழுவோ சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பது பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போன்றது.

அமமுகவை சீண்டிப்பார்ப்பது உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டு பார்ப்பதற்கு சமம். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானது. ஒரு சிறு குழு விலகிச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சம் இல்லாமல் போய்விடுமா?

இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

More News >>