தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின்: செந்தில் பாலாஜி புகழாரம்

அமமுகவில் இருந்து விலகி, இன்று திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாராம் சூட்டியுள்ளார்.

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கூறியதாவது: தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின். மக்கள் பணியாற்றும் ஸ்டாலின் செயல்கள் தன்னை ஈர்த்ததால் திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன். திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்த கரூர் மாவட்ட மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து,  நிர்வாகிகளிடம் கூடி பேசி, ஆலோசித்து திமுகவில் இணைந்துள்ளேன்.

எனக்கு ஆதரவளிக்கும் தொண்டர்கள் பலர் விரைவில் திமுகவில் இணைய உள்ளனர். முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா முதல்வர் ஆக வேண்டும் என்று தான் மக்கள் வாக்களித்தனர். இபிஸ், ஓபிஎஸ் முதல்வராக வேண்டும் என்பதற்காக இல்லை. இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி தமிழக நலனுக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>