அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் சோனியா, ராகுல் மரியாதை

சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை சோனியா திறந்து வைத்தார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு அனைவரும் புறப்பட்டனர்.

அப்போது சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தேசிய தலைவர்களின் அஞ்சலி #StatueOfKalaignar https://t.co/7mx78vWiYB

— M.K.Stalin (@mkstalin) December 16, 2018
More News >>