ஓஎன்ஜிசி ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்: மும்பையில் பரபரப்பு

மும்பை: ஓஎன்ஜிசி ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அதை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையின், ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன்ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில், ஓஎன்ஜிசி ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரண்டு பைலட்டுகள் பயணம் செய்தனர்.

ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால், குறித்த நேரத்திற்குள் எண்ணெய்க் கிணறு உள்ள பகுதியில் தரையிறங்கவில்லை என தெரிகிறது.

இறுதியில், 10.30 மணியளவில் எண்ணெய் கிணற்றில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஹெலிகாப்டர் தொர்பில் இருந்துள்ளது. அதன்பின்னர், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More News >>