பொங்கலுக்கு வகை வகையான பொங்கல் செய்ய ரெடியா..

தைத் திருநாளின் முதல் நாளான பெரும் பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே இனிப்பு பொங்கல் தான். வருஷம் வருஷம் இனிப்பு பொங்கல் தானே செய்றோம். இந்த வருஷம் பொங்கலுக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துவோம். ரெடியா..?

 இப்போ ஓட்ஸ் பொங்கல் எப்படி செய்றதுனு பார்ப்போம்.

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_2 கப்பச்சைப் பருப்பு_3/4 கப்மஞ்சள்தூள்_1/4 டீஸ்பூன்உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்மிளகு_1 டீஸ்பூன்சீரகம்_1 டீஸ்பூன்முந்திரி_10இஞ்சி_ஒரு சிறிய துண்டுகறிவேப்பிலை_கொஞ்சம்

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக்கொள்ளவும். பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸுக்கு இரண்டரை பங்கு தண்ணீர் என 5 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும். கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு,தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

இரண்டும் நன்றாகக் குழைந்து,வேகும் வரை மிதமானத் தீயில் வைக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தி,அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து),சீரகம்,இஞ்சி,முந்திரி, கறிவேப்பிலை தாளித்துப் பொங்களில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம்.இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி,சாம்பார் இவை மிகப்பொருத்தமாக இருக்கும்.

More News >>