தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டுப் போட்டவங்க நோக்கமே வேற விஷால் அடடே விளக்கம்!

தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு குழுவைச் சேர்ந்த சுமார் 50 தயாரிப்பாளர்கள் நேற்று தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் ஒன்று திரண்டு விஷாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். விஷால், உடனடியாக அங்கு வரவேண்டும் என தெரிவித்தனர்.

விஷால் அங்கு வராததால், கடுப்பான அவர்கள், சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு, சாவியை முதலமைச்சர் பழனிசாமியிடம் தரப்போவதாக தெரிவித்தனர். பின்னர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் சாவியை ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த விஷால், இளையராஜா நிகழ்ச்சியை தடுப்பது மட்டுமே அவர்களின் நோக்கம். தயாரிப்பாளர் சங்க கணக்கு விவரங்கள் பொதுக்குழுவில் சமர்பிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டவர்கள் நினைப்பது நடக்காது. அவர்கள் ஏற்கனவே பொதுக்குழுவில் பிரச்சனை செய்தவர்கள் என்றார்.

ஆனால், இந்தாண்டிற்கான பொதுக்குழு இதுவரை ஏன் நடத்தப்படவில்லை என்பதற்கும், சினிமா பைரசியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பட வெளியீட்டு பிரச்சனைகள் குறித்தும் விஷால் வாய் திறக்காதது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

More News >>