பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்

சென்னை: தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் ஞானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன்(63). செங்கல்பட்டை சேர்ந்த ஞானி, ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். பிரபல எழுத்தாளர், அரசியல் விமர்சகர், பத்திரிக்கை ஆசிரியர், நாடக கலைஞர், கட்டுரையாளர் என்று பல்முகம் கொண்டவர் ஞானி.

இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணத்தால் அவதிப்பட்டு வந்தார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஞானி மரணமடைந்தார்.இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

More News >>