தனுஷை வைத்து புது படத்தை இயக்கும் வெற்றிமாறன் அப்போ வடசென்னை பார்ட் 2 அவ்வளவுதானா?

வடசென்னை மூன்று பாகங்களாக வெளிவரும் என அறிவித்த வெற்றிமாறன் தற்போது தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன்  இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் நேற்று வெளியானது. சாய் பல்லவி, கிருஷ்ணா, ரோபோ ஷங்கர், டொவினோ தாமஸ் ஆகியோர்  நடித்திருந்த இப்படம் முதல் நாளில் வசூலை குவித்துள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை தனுஷ் தற்போது வெளியிட்டிருக்கிறார். வடசென்னை படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களும், சர்ச்சைகளுமே புதிய படத்தில் இவர்கள் இணைய காரணமா? அல்லது இந்த படத்திற்கு பிறகு வடசென்னை எடுக்கப்படுமா என்பதை படக்குழு இன்னும் விளக்கவில்லை.

மேலும் இப்படத்திற்கு அசுரன் என்று தலைப்பு வைத்திருக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை  தயாரிக்கவுள்ளார். ஹீரோயின் பெயரும், மற்ற கதாப்பாத்திரத்தின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

More News >>