முதுபெரும் தமிழறிஞர் க.ப. அறவாணன் காலமானார்

சென்னையில் முதுபெரும் தமிழறிஞர் க.ப. அறவாணன் (வயது 77) இன்று காலமானார்.

நெல்லை அருகே கடலங்குடியில் 1941-ம் ஆண்டு க.ப. அறவாணன் பிறந்தார். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர் அறவாணன். சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் விருதை பெற்றவர்.

சென்னையில் வசித்து வந்த நிலையில் இன்று காலை அறவாணன் காலமானார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

More News >>