சாடஸ்ட் ஸ்டாலின் என அழைப்போம்.... தமிழிசை சவுந்தரராஜன்

பிரதமர் மோடியை சாடிஸ்ட் என அழைப்பதால் இனி திமுக தலைவர் ஸ்டாலினை சாடஸ் என்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி தமது இரங்கலை தெரிவித்திருக்கிறார். ஆனால் உண்மைக்கு மாறாக பிரதமர் இரங்கல் தெரிவிக்கவே இல்லை என ஸ்டாலின் கூறுவது தவறு.

தமிழகத்தில் பாஜக இனி விஸ்வரூபம் எடுக்கும். சிறுபான்மை மக்களை பாரதிய ஜனதா கட்சி மதிக்கிறது.

நாங்கள் யாரும் பிரிவினை ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடியை சாடிஸ்ட் என கூறி வருகிறார் ஸ்டாலின். அதனால் அவரை இனி சாடஸ்ட் ஸ்டாலின் என அழைப்போம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

More News >>