வெப் சீரிஸில் களமிறங்கும் மகேஷ்பாபு!

செளத் இந்தியன் பிரின்ஸ் என அழைக்கப்படும் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, புதிதாக ஒரு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் மகேஷ்பாபு. தொழிலிலும் அதிக ஆர்வம் உடையவர். சமீபத்தில் ஐதராபாத்தில் இவர் கட்டிய பிரம்மாண்டமான ஏஐபி எனும் திரையரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனமான மகேஷ்பாபு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் புதிய வெப் தொடர் ஒன்றையும் மகேஷ்பாபு தயாரிக்கவுள்ளார். ஹுசைன் என்பவர் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த வெப் தொடரில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகேஷ்பாபுவும் இந்த வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பும் உள்ளதாக தெரிகிறது. பாரத் அனே நேனு படத்தை தொடர்ந்து மகரிஷி என்ற படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் மகேஷ்பாபு, தயாரிப்பு நிறுவன வேலைகளையும் சரிசமமாக பார்த்து வருகிறார்.

More News >>