லோக்சபா தேர்தல்- அந்தப்புரத்துக்கு சீட் வாங்க அல்லாடும் தேசிய கட்சியின் மாஜி மாநில தலைவர்!

லோக்சபா தேர்தலில் தமது அந்தப்புரத்துக்கு எப்படியாவது சீட் வாங்கித் தர வேண்டும் என தேசிய கட்சியின் மாஜி தலைவர் டெல்லிக்கு படையெடுத்து கொண்டிருக்கிறாராம்.

மாநில கட்சியின் வடமாவட்ட தலைவர் ஒருவரின் அந்தபுரம் கோவையில் மையம் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துகளை அந்தப்புரத்துக்காக வாங்கி கொடுத்திருக்கிறார் வடமாவட்ட பிரமுகர்.

இந்த சொத்துகளை அந்தப்புரத்தின் கணவர்தான் நிர்வகித்து வருகிறார். லோக்சபா தேர்தலில் ‘அந்தப்புரம்’ சீட் வாங்கி தந்தாக வேண்டும் என வடமாவட்டத்துக்காரரை நெருக்கிக் கொண்டிருப்பதை நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.

இப்போது தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவரும் அந்தப்புரத்துக்கு சீட் வாங்க அல்லாடி கொண்டிருக்கிறாராம். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என தேசிய கட்சியின் தலைமை முடிவு எடுத்திருக்கிறதாம்.

இதை மோப்பம் பிடித்த மாஜி தலைவர் எப்படியாவது தமது கோட்டாவில் ‘அந்தப்புரத்துக்கு’ வாங்கியே ஆக வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் டெல்லியோ நீங்க ஏன் எப்பவுமே அவங்களுக்கு சீட் கொடுத்தே ஆகனும்னு அடம்பிடிக்கிறீங்க.. உங்க பையனுக்கு சீட் கேட்டிருந்தா கூட நியாயமாக இருக்குமே என கடிந்து கொண்டதாம்.

-எழில் பிரதீபன்

More News >>