டார்கெட் செய்யப்படுகிறாரா சோனாக்ஷி சின்ஹா?

தனது திரையுலக வாழ்க்கையை முடக்க சதி நடப்பதாக பாலிவுட் நாயகி சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் பரீட்சையமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. சமீப காலமாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டவில்லை. மாறாக தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு வருவதாக கூறிவிட்டு, பணம் வாங்கிய சோனாக்‌ஷி சின்ஹா விழாவிற்கு வராமல் பண மோசடி செய்தததாக, அவர் மீது தொழிலதிபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தான் அவரிடம் எந்த பணமும் வாங்கவில்லை என்றும், தனது திரையுலக வாழ்க்கையை முடக்க நடக்கும் சதியை தகர்த்தெறிந்து மீண்டும் பாலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிப்பேன் என சோனாக்‌ஷி ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.

More News >>