மன்னார்குடி, விருத்தாசலத்தை மிரட்டிய திவாகரன், வேல்முருகன்

மன்னார்குடி மற்றும் விருத்தாசலத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இருவேறு நிகழ்வுகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை திரட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தினர்.

மன்னார்குடியில் தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு முனைவர் திவாகரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மன்னார்குடி தேரடியில் புறப்பட்ட இப்பேரணி பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது.

மன்னார்குடியை மலைக்க வைக்கும் வகையில் திவாகரன் மாஸ் காட்டும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. அதேபோல் விருத்தாசலத்தில் என்.எல்.சி.3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுரங்கம் அமைக்க நிலம் தர மறுத்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அணிதிரண்டு பங்கேற்றனர். இந்த போராட்டம் வேல்முருகனின் பலத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

More News >>