ஐந்து நாள் டிராமா முடிவுக்கு வந்தது - ஓ பி.எஸ் சகோதரர் ராஜா மீண்டும் உள்ளே !

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்.சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆவின் சேர்மன் பதவிக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி கடந்த 19ம் தேதி அதிமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டார் ஓ.ராஜா. இவரது நீக்கத்திற்கான காரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் இன்று ஓ . ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப் பட்டுள்ளார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஓ . ராஜா கடிதம் கொடுத்ததை அடுத்து மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.

More News >>