காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத 3-வது அணி அமைக்கும் முயற்சியில் கே.சி.ஆர். தீவிரம்! மம்தாவுடன் தீவிர ஆலோசனை!

காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத 3 - வது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் படு பிசியாகி விட்டார்.

ஞாயிறன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த அவர் மறுநாள் (திங்கள்கிழமை) கொல்கத்தாவில் மே.வங்க முதல்வர் மம்தாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் மாயாவதியை சந்தித்த பின் கே.சி.ஆர் கூறுகையில், தேசிய அளவில் மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி வெற்றி பெறும். காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத 3-வது அணி வலுப்பெரும் .

இதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு விரைவில் 3-வது அணி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

More News >>