என்னை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் ரஜினி கட்சிக்கு போவேன்.... ராகுலை மிரட்டிய திருநாவுக்கரசர்

கூட்டணி விவகாரத்தில் சாதித்த திமுக- திருநாவுக்கரசருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு! ராஜினாமா கடிதம் வாங்கினார் ராகுல்!

தலைவர் பதவிக்கு ஆபத்து....சிங்கிள் டிஜிட் தொகுதிகள் கூட ஓகே.. ஸ்டாலினிடம் சரண் அடைந்த திருநாவுக்கரசர்- கடுப்பான ராகுல்!

தலைவர் பதவிக்கு வேட்டு - ராகுல் மீது கடும் அதிருப்தி- நள்ளிரவில் மகனுடன் அமெரிக்கா புறப்பட்ட திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் ரஜினி கட்சியில் ஐக்கியமாவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்துள்ளாராம் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசரின் பதவியை பறிப்பது என ராகுல் முடிவு செய்து ராஜினாமா கடிதமும் வாங்கி வைத்துவிட்டார் என்பதை நாம் முதன் முதலில் பதிவு செய்தோம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் வட்டாரங்கள் ராஜினாமா கடிதம் வாங்கிய பின்னர் நடந்தவற்றை பற்றி கூறுகையில் டெல்லியில் தமக்கு நெருக்கமான மூத்த காங்கிரஸ் தலைவரை ஒருவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

சிங்கப்பூரில் கமல் ! அமெரிக்காவில் விஜயகாந்த், ரஜினி, திருநாவுக்கரசர்!!

அந்த சந்திப்பில் தம்மை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் வெளியே சென்று ரஜினி கட்சியில் சேர்ந்து விடுவேன். ஜி.கே.வாசன் வெளியே போனபோது காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனா, என் மீது கை வைத்தால் காங்கிரசுக்கு நிச்சயம் பெரிய சேதாரம் ஏற்படும் என கூறியிருக்கிறாராம். ராகுல் காந்தியின் காதுகளுக்கு இது போக வேண்டும் என்பதற்காகவே இப்படி மிரட்டல் விடுத்திருக்கிறாராம் திருநாவுக்கரசர்.

ரஜினி வீட்டுக்காக ‘தரகர்’ அவதாரமெடுத்த அரசியல் தலைவர்

- எழில் பிரதீபன்

More News >>