ரஜினிகாந்த் எங்களோடு ஒத்துப் போகிறார் - தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

ரஜினியின் கொள்கை எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகிறது. கொள்கை ஒன்றுபட்டாலும் அரசியலில் இணைந்து செயல்படுவது வேறு என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணி வித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’’பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குருமூர்த்தியின் கருத்து. ஒரு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்ற வகையில் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

ஊழலற்ற ஆட்சி வேண்டும். மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. ரஜினியின் கொள்கையும் எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகிறது. கொள்கை ஒன்றுபட்டாலும் அரசியலில் இணைந்து செயல்படுவது வேறு.

அவர் இப்போதுதான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இருக்கிறார். இனி கட்சி தொடங்கி அவரது செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>