கருணாநிதியின் நினைவுகளால் கதறி அழுத துரைமுருகனுக்கு நெஞ்சு வலி!

தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தன்னை தத்துப்பிள்ளையாக வளர்த்தவர் கருணாநிதி என்று கூறி தேம்பித் தேம்பி அழுதார். அத்துடன் மேற்கொண்டு பேச முடியாமல் வாய் விட்டு துரைமுருகன் கதறி அழுதார்.

இது சட்டசபையில் இருந்த பெரும்பாலான திமுக உறுப்பினர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்த நெகிழ்ச்சியான சம்பவம். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் சேர்க்கப்பட்டார்.

பின்னர் உடல் நிலை சீரானதால் காலை 8 மணிக்கு துரைமுருகன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

More News >>