ஓடும் ரயிலில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை!

குஜராத்தில் ஓடும் ரயிலில் பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில பா.ஜ.க முன்னாள் துணைத் தலைவர் ஜெயந்தி பன்சாலி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை ஓடும் ரயிலில் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

அருகே அவருடைய கைத்துப்பாக்கியும் கிடந்தது. இதனால் பன்சாலி சுட்டுக் கொல்லப்பட்டாரா? அல்லது தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க மாநில துணைத் தலைவராக இருந்த பன்சாலி பலாத்கார வழக்கில் சிக்கி கடந்த 2017-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>