8 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் எட்டுப் பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட, நான்கு மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றொரு படகுடன் கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்கள் நேற்று காரைநகர் கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இரண்டு படகுகளையும், எட்டு மீனவர்களையும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

More News >>