பிரபல அரசியல் வாரிசுடன் இயக்குநர் மனைவி! பெரியகுளத்தில் நடக்கும் பட்டிமன்றம்

பிரபலமான இயக்குநர் ஒருவரின் மனைவி, பெரியகுளத்தில் டெண்ட் அடித்திருப்பதைப் பற்றித்தான் அதிமுக முகாமில் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த இயக்குநரின் டார்ச்சர் தாங்க முடியாமல் திவாலானவர்கள்தான் அதிகம். அவருக்கு சரியான செக் வைத்திருக்கிறாராம் மனைவி.

திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் அந்த இயக்குநர். அவரிடம் வேலை பார்ப்பதற்கு டெக்னீஷின்களே பயப்படுவார்கள். கோபம் வந்துவிட்டால் மனிதர் கையில்ல கிடைப்பதை எல்லாம் தூக்கி அடித்துவிடுவார் என்பதுதான் கவலைக்கான காரணம். இவரிடம் அசிஸ்டெண்ட் இயக்குனராக வேலை பார்ப்பதற்காக வந்தார் தற்போதைய இயக்குநர் கம் நடிகர் ஒருவர். அப்போது இருந்த கோபத்தில், நீயெல்லாம் எதுக்கு சினிமாவுக்கு வர்றே எனக் கூறி, விரட்டியடித்துவிட்டார்.

பின்னாளில் அந்த அசிஸ்டெண்ட் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். இதைக் காண சகிக்காத அந்த இயக்குநர், என்னுடைய டைரக்சனில் நீ நடி என வலைவிரித்தார். நடிகரும், இப்படியொரு மகானின் படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறதே என சொந்த முதலைப் போட்டுப் படம் எடுத்தார். இதில் மதுரைக்கார புள்ளியின் வலையில் சிக்கி, உறவினரையும் பலி கொடுத்தார் நடிகர். அடுத்தடுத்த கடன்களால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார் நடிகர்.

இயக்குநரின் திருவிளையாடல் பற்றிப் பேசிய அந்த நடிகர், அவர் யாரைத்தான் வாழ விடறார். வாங்கின கடனுக்கு எந்தப் படத்தையும் வெளியிட முடியலை. தியேட்டர்காரங்களை எல்லாம் போன் போட்டு திட்டறாங்க. அந்த டைரக்டரும் சைலண்டாக இருக்கிறார் என வேதனைப்பட்டாராம். இந்த நிலையில்தான் இயக்குநருடன் வாழப் பிடிக்காமல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் புள்ளியின் மகனோடு ஜோதியில் கலந்து விட்டாராம் அவரது மனைவி.

இயல்பிலேயே பேரழகுடன் இருக்கும் மனைவியைத் தேடி பல முனைகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தார் இயக்குநர். பெரியகுளத்தில் கடந்த 3 மாதங்களாக டெண்ட் அடித்திருப்பதை அறிந்து ஷாக்காகிவிட்டாராம். அரசியலில் நெருங்க முடியாத இடத்தில் அரசியல் புள்ளியின் வாரிசு இருப்பதால், யாருடன் பஞ்சாயத்து பேசுவது என சிகரெட்டைத் ஊதி ஊதித் தள்ளுகிறாராம் இயக்குநர்.

More News >>